வழங்கப்படும் சேவைகள்

இலங்கை சமூக பாதுகாப்புச்  சபை சுயதொழில் செய்பவர்களுக்கு அவர்களின் ஓய்வு       வயதில், மற்றும் ஊனமுற்றவர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குகிறது. உறுப்பினர் இறந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின் விதிகளின்படி, தங்கியிருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அவர்/அவள் அரசாங்க ஓய்வூதியத்தைப் பெறுவது அல்லது ஓய்வூதியம் பெறக்கூடிய பதவியில் இல்லாமல் இருப்பது இத்திட்டத்தில் பங்களிப்பாளராக இருப்பதற்கான தகுதியாகும்.

இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் நோக்கங்கள், சுயதொழில் செய்பவர்களை அவர்களின் வேலைகளில் தொடா்ந்து ஈடுபட ஊக்குவிப்பதும் அவர்களின் ஆற்றல்கள்  மற்றும் திறன்களை மேம்படுத்துவதும் ஆகும். பொதுவாக சுயதொழில் செய்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையும் உதவுகிறது. ஓய்வூதியத் திட்டங்கள் பற்றிய மேலும் தகவலுக்கு, 25 செப்டம்பர் 2006 தேதியிட்ட இலங்கை அரசாங்கத்தின் அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 1464/5ஐப் பார்க்கவும்.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை
0
மாதாந்திர ஓய்வூதியம் பெற உரிமையுள்ள பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை
0
இறப்பு பணிக் கொடை கொடுப்பனவுகளின் மொத்த எண்ணிக்கை
0
பகுதி ஊனமுற்றோருக்கான கொடுப்பனவுகளின் மொத்த எண்ணிக்கை
0
முழுமையாக ஊனமுற் றோருக்கான கொடுப்பனவுகளின் மொத்த எண்ணிக்கை
0

சுரகும

"சுரகும" திட்டம் 18-59 வயதுடையவர்களுக்கானது. உறுப்பினர்கள் எந்த தொகை வேண்டுமானாலும் கட்டலாம். ஓய்வூதியத்தின் அளவு மற்றும் கொடுப்பனவு என்பன உறுப்பினர் களின் விருப்பப்படி தீர்மானிக்கப்படலாம்.

ஆரஸ்சாவ

“ஆரஸ்சாவ” திட்டம் என்பது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முன்கூட்டித் திட்டமிடப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது, அவர்கள் தானாகவே "சுரகும" திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். பாதுகாவலரின் கீழ் வழங்கப்பட்டது மற்றும் 18 வயது வரை மட்டுமேகட்டணம் செலுத் துதல் வேண்டும்.

மனுசவி

“மனுசவி” திட்டம் 18-59 வயதுக்குட்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது உறுப்பினர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் காலத்தைப் பொறுத்து கட்டணம் செலுத்தும் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். ஓய்வூதியம் 60 வயதிலிருந்து தொடங்குகிறது. ஓய்வூதியத்தின் அளவு மற்றும் கொடுப்பனவை உறுப்பினர் அவர்களின் விருப்பப்படி தீர்மானிக்கலாம்

புது புத் மாபிய ஹரசர

மரியாதைக்குரிய பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகளது பெற்றோருக்கு புது புத் மாபிய ஹரசர என்ற ஓய்வூதியம் மற்றும் சமூகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது

கலைஞர்

கலைஞர் திட்டம் 23-55 வயதுக்கு இடைப்பட்ட கலைஞர்கள் தங்கள் விருப்பப்படி ஓய்வூதியத் தொகை மற்றும் தவணைக்கட்டணம் செலுத்தும் முறையைத் தீர்மானிக்கலாம். எங்கள் உறுப்புரிமையை கணக்கிட்ட பிறகு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு தனியான நிலையான வைப்பினை SLSSB திறக்கிறது. நிலையான வைப்பில் உள்ள மொத்தத் தொகை கலைஞருக்கு அவரது முதல் ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.

மாலுமி

2006 ஆம் ஆண்டு இலங்கையால் திருத்தப்பட்ட சர்வதேச தொழில் அமைப்பில்,கடல்சார் தொழிலாளர் அமைப்பு மற்றும் ,1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின்படி மாலுமிகளுக்கான விசேட சமூகப் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.