எமது சபையுடன் இணைந்த அகில இலங்கை ரீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன், மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் (திங்கள், செவ்வாய், புதன்) நில்லம்பே பயிற்சி நிலையம், (சமூக வலுவூட்டல் அபிவிருத்தி திணைக்களம், வாரியகல, நில்லம்பே, பேராதனை) என்னுமிடத்தில் நடாத்தப்பட்டது.