2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தி ற்கு (RTI) இணங்க, உரிமைகள் மற்றும் தகவல்களை அணுகுவதை உறுதி செய்வதன் மூலம் இலங்கை சமூக பாதுகாப்பு சபை அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த முயல்கிறது.
தகவல்களை எவ்வாறு கோருவது
இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையிடமிருந்து தகவல்களைக் கோர விரும்பும் பிரஜைகள் RTI 01 மூலம் கோரப்பட்ட தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு, தகவல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க முடியாத பட்சத்தில், அலுவலரிடம், தனிநபர் கோரிக்கையை வாய்மொழியாக செய்யலாம்.
மேல்முடையீட்டுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் எப்படி முறையிடுவது முன்வைப்பது
எந்தவொரு குடிமகனும் மேல்முறையீடு செய்யலாம்:
• தகவலுக்கான கோரிக்கையை நிராகரித்தல்,
• தகவலுக்கான அணுகுவதை நிராகரித்தல்,
• கோரப்பட்ட படிவத்தில் தகவலை வழங்க மறுப்பது,
• சட்டத்தால் குறிப்பிடப்பட்ட காலவரையறைகளுக்கு இணங்கத் தவறுதல்,
• முழுமையற்ற, தவறான அல்லது பொய்யான தகவலை வழங்குதல்,
• அதிக கட்டணம் வசூலிப்பது அல்லது
• தகவலுக்காக அணுகுவதைத் தடுப்பதற்காக, தகவல் சிதைக்கப்பட்டது, அழிக்கப்பட்டது அல்லது தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ள பட்சத்தில்.
மேல்முறையீடு செய்வதற்கான அத்தகைய காரணம் எழுந்த நாளிலிருந்து பதினான்கு நாட்களுக்குள், RTI 10, ல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தைப் பயன்படுத்தி நிரப்புவதன் மூலம் தியமிக்கப்பட்ட அதிகாரியிடம் முறையீடு செய்யலாம்.
தலைவர்
Tel: +94 11 2886580
Fax: +94 11 2886580
Email: chairman@ssb.gov.lk
பிரதி பொது முகாமையாளர்
(சமூக பாதுகாப்பு)
Tel: +94 11 2886582
Fax: +94 11 2886582
Email: dgm.socialsecurity@ssb.gov.lk
பிரதி பொது முகாமையாளர்
(நிதி)
Tel: +94 11 2886583
Fax: +94 11 2886583
Email: dgm.finance@ssb.gov.lk
உதவி பொது முகாமையாளர்
(மனித வளம் மற்றும் கொள்முதல்)
Tele: +94 11 2886584
Fax: +94 11 2886584
Email: agm.admin@ssb.gov.lk