"விகமாணிகா" திட்டம் 18-59 வயதுக்குட்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது உறுப்பினர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் காலத்தைப் பொறுத்து கட்டணம் செலுத்தும் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். ஓய்வூதியம் 60 வயதிலிருந்து தொடங்குகிறது. ஓய்வூதியத்தின் அளவு மற்றும் கொடுப்பனவை உறுப்பினர் அவர்களின் விருப்பப்படி தீர்மானிக்கலாம்.
"கலாகரு" திட்டம் 23-55 வயதுக்கு இடைப்பட்ட கலைஞர்கள் தங்கள் விருப்பப்படி ஓய்வூதியத் தொகை மற்றும் தவணைக்கட்டணம் செலுத்தும் முறையைத் தீர்மானிக்கலாம். எங்கள் உறுப்புரிமையை கணக்கிட்ட பிறகு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு தனியான நிலையான வைப்பினை SLSSB திறக்கிறது. நிலையான வைப்பில் உள்ள மொத்தத் தொகை கலைஞருக்கு அவரது முதல் ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.