+94 112 886 585 - 86 info@ssb.gov.lk திங்கள் – வெள்ளி: காலை 8:30 – மாலை 4:15
Sri Lanka Social Security Board Logo

திட்டங்கள்



ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய இடங்கள்,

  • Grama Niladhari
  • Samurdhi Development Officer
  • Divisional Secretariat
  • SLSSB – District Office
  • SLSSB – Head Office
  • Other Officers Authorized by SLSSB

தவணைக்கட்டணம் செலுத்தக்கூடிய இடங்கள்

  • அரசாங்க வங்கி – (இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி)
  • தபால் அலுவலகம்
  • அங்கீகரிக்கப்பட்ட கிராம அலுவலர்
  • பிரதேச செயலகம்
  • SLSSB – மாவட்ட அலுவலகம்
  • SLSSB – தலைமை அலுவலகம்

வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்கள்

உங்கள் பதிவுக்கு உதவி தேவையா?

ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்களுக்கு உதவ எங்கள் வாடிக்கையாளர் சேவை குழு உள்ளது.


சுரெகும


"சுரெகும" திட்டம் 18-59 வயதுடையவர்களுக்கானது. உறுப்பினர்கள் எந்த தொகை வேண்டுமானாலும் கட்டலாம். ஓய்வூதியத்தின் அளவு மற்றும் கொடுப்பனவு என்பன உறுப்பினர் களின் விருப்பப்படி தீர்மானிக்கப்படலாம்.

ஆரஸ்ஸாவ


"ஆரஸ்ஸாவ" திட்டம் என்பது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முன்கூட்டித் திட்டமிடப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது, அவர்கள் தானாகவே "சுரகும" திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். பாதுகாவலரின் கீழ் வழங்கப்பட்டது மற்றும் 18 வயது வரை மட்டுமேகட்டணம் செலுத் துதல் வேண்டும்.

விகமாணிகா


"விகமாணிகா" திட்டம் 18-59 வயதுக்குட்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது உறுப்பினர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் காலத்தைப் பொறுத்து கட்டணம் செலுத்தும் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். ஓய்வூதியம் 60 வயதிலிருந்து தொடங்குகிறது. ஓய்வூதியத்தின் அளவு மற்றும் கொடுப்பனவை உறுப்பினர் அவர்களின் விருப்பப்படி தீர்மானிக்கலாம்.

கலாகரு


"கலாகரு" திட்டம் 23-55 வயதுக்கு இடைப்பட்ட கலைஞர்கள் தங்கள் விருப்பப்படி ஓய்வூதியத் தொகை மற்றும் தவணைக்கட்டணம் செலுத்தும் முறையைத் தீர்மானிக்கலாம். எங்கள் உறுப்புரிமையை கணக்கிட்ட பிறகு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு தனியான நிலையான வைப்பினை SLSSB திறக்கிறது. நிலையான வைப்பில் உள்ள மொத்தத் தொகை கலைஞருக்கு அவரது முதல் ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.



நாவிகயா


2006 ஆம் ஆண்டு இலங்கையால் திருத்தப்பட்ட சர்வதேச தொழில் அமைப்பில்,கடல்சார் தொழிலாளர் அமைப்பு மற்றும் ,1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின்படி மாலுமிகளுக்கான விசேட சமூகப் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.